தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்
திசையெட்டும் திரிந்து நா வளர்த்த
மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு
வழமையான ரசம்தான்
என் ரசம் அலாதி
அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி
கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய
எரும
உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண
சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
எவரோ சொன்னது
பழந்தமிழர் வீரமறவராம்
இருக்கலாம்
மற்றவர்க்கு எப்படியோ
எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.
11.02.94
குறிப்பு:
கவிதை எழுத ஆரம்பித்த புதிதில் ‘கவிதை மாதிரி’ எழுதி வைத்தது. ஈழம் குறித்து தற்போது எழுதப்பட்டு வரும் ஆகக்கேடான விஷயங்கள் குறித்து எழுத உட்கார்ந்து புரட்டிக் கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது. கணிசமான மாற்றங்களுடன் திருத்தி எழுதி பதிவில்.
“மடையன்” என்பதற்கு சமையல்காரன் என்ற பொருளும் உண்டு.
மறுமொழியொன்றை இடுங்கள்