வசவு வா வானவன் வள் வள் என எதிர்க்கவிதை எழுதத் தொடங்கினான்.
வ
வ
வள்
வள் வள்
வள்ளலை
வெல்லுமோ
எள்ளல்
துக்கடாத் துள்ளல்
துட்டுக்குத் துண்டேந்தும்
சிறு கும்பல்
வெம்பல்.
சல்லிப்பயலுவ! முட்டாக் கழுதைக! மூதேவிக! முதுக்குக் கீழே சொறிந்து விடும் ஜென்மங்க! ஜந்து! ஜடம்! மூடம்! சகட்டு மேனிக்கு வார்த்தைகளை வீசினான்.
வார்த்தை, வீச்சம், வெங்காயம், வெள்ளைப் பூண்டு!
உருப்படத் தெரியாத வெங்காயம்! ஈர வெங்காயம்!
நீ ஒரு பலாப்பழமடா என்றான் வ வின் வள் – ளை ரசிக்காத நண்பனொருவன்.
வாழைபழத் தோலு என்று எரிந்து விழுந்தான் வள் வ.
வெளக்கெண்ணெய் என்றான் நண்பன்.
சர்ர்தான் போடா! எச்சி எலையிலே தடவிப் போடறேன்! என்றான் வள் வள்.
போனவன் போனவந்தான்.
செல்லமே! ஏனடா இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுகிறாய் என வந்தாள் காதலி.
போடி புண்ணாக்கு! பொரிந்து தள்ளினான் வ.
திருந்தாத ஜென்மம்! உன்னை வளைக்கவே முடியாதடா வள் வள் விலங்கு!
அவளும் போனாள்!
சர்தாம் போடி! நான் என்ன பேடியா! பொறுக்கி!
பொங்கினான் வள் வள்!
பின்னூட்டமொன்றை இடுக