ஒரு முத்தம்
வாழ்வு முழுக்க நினைவிலிருக்கும்
ஒரு முத்தம்
நமக்கு வேண்டும்
ஆன்மாவின் பருண்மையில்
அது தங்கியிருக்க வேண்டும்
சிப்பி பிளந்து ஒளி வீச
ஒரு மழைத் துளிக்கென
காத்துக் கிடக்கிறது ஒரு முத்து
பாலையில் பூத்த மலரொன்று
தவித்துக் காத்துக் கிடக்கிறது
காணா காதலனை
சாளரம் இரவைத் திறக்கிறது
நிலவு அழைக்கிறது
உன் விழியால் என் விழியைத் திறந்துவிடு
மொழிச் சாரலை விலத்தி
காதல் சாளரத்தை
காற்றில் இசைக்கவிடு
நிலவு சாளரத்தின் வழி நுழைவதில்லை
காதலின் ஊற்றாகத்தான்
13.02.2014
பாரசீக சூஃபி கவிஞர் ரூமியின் கவிதையொன்றின் மொழியாக்கத்தை வாசித்த உந்துதலில் எழுதியது.
மறுமொழியொன்றை இடுங்கள்