கசாப்புக் கடை

கோடரி கொண்டு கபாலம் பிளந்து

என்னை அவர்கள் கொல்லவில்லை.

புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்

நான் இறக்கவில்லை.

வாள் கொண்டு கழுத்தையறுத்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த

வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.

காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

குறுவாளால் குறி அறுபட்டும்

நான் இறக்கவில்லை.

கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

பலகை ஒன்றின் மீது இலகுவாக

நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.

கரங்கள் பின்னே கட்டியிருக்க

முகமிழந்து

விழியகலத் திறந்திருக்க

கனத்த சுருக்கு

கழுத்தை இறுக்க

பலகை இழுபட

முண்டம் துடிதுடிக்க

ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.

கவிதை, கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

எது

நீ

நான்

அது

இது

எது

ஏது

புது

புகு

பகு

நகு

மிகு

தகு

ஏகு

எரு

ஏறு

மிகு

வகு

திகு

திகு

தீ

நீ

நான்

அது

இது

எது

ஏது

.

.

.

12.11.2010

கவிதை, கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

இலக்கற்ற கணைகள்

சிதறி

ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கும்

பிறர் அம்புகளை சேகரிக்கிறேன்

தொடுத்து

புஜம் கொண்ட பலம்

மட்டுக்கும் இழுத்து

குறிபார்க்காமல் இலக்கில்லாமல்

வானில் எய்கிறேன்

கணைபட்டு வீழ்ந்தது

புறாவோ பருந்தோ

அதனலகில் சிக்கிக் கிடந்த

புழுவோ சர்ப்பமோ

களவாடிச் சென்ற காகமோ

அது உதிர்த்த அணிகலனோ

அறியேன் யானறியேன்.

05.12.2001 – இல் குறிப்பாகக் கிறுக்கி வைத்திருந்தது.

இன்று (18.10.12) செப்பனிட்டது.

கவிதை, கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

கூரிய தூரிகையும் மழுங்கிய பேனாவும்

என் நேசம் வார்த்தைகளில் வந்தது
கவி என எனை ஒப்பினால்

உன் தூரிகை
சிறு கோடும் தீட்டவில்லை எனை

நீ என் மனதுள் உறைந்திருந்தாய்
வார்த்தைகளில் வெளிவந்தாய்
கவி என எனைத் துய்த்ததால்
நீ வந்தாய்
என் வரிகளில்

என் எழுத்தில் நானில்லை
நீ

உன் தூரிகையில் நீ
நானில்லை

நீ வரைந்தாய்
உனை

நான் எழுதினேன்
உனை

என் வார்த்தையில் நீ நீயாக வந்தாய்
உன் தூரிகையில் நீ நீயாகவே இருந்தாய்

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 3 Comments »

இன்மை

மெய் வருத்தலற்ற புனைவு தரித்து

ஆன்மாவற்ற உலகு அலைகிறது

நீதியில்லா மாந்தர்

நேர்மை தொலைத்த மாக்கள்

உளச்சுத்தி இழந்த பொய்யர்

நா பிறழ்ந்த நரகர்

நட்பற்ற நவிலர்

துப்பற்ற துடியர்

துறவற்ற தடியர்

காதலற்ற கள்ளக் காளையர்

அன்பற்ற பெண்டிர்

ஆழி சூழ் உலகு

உரசவொரு கல் தேடி

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

தவளை

தலை

தலை தலை

தலையே தளை

தறுதலை

தூர அலை

தெரிந்தலை

துன்ப அலை

துணிந்து அலை

துகில் அலை

துகித்தலை

தலை தகித்தலை

தத்தளை

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

சொய்யம்

சுயம்

சுய தேடல்

சுய விமர்சனம்

சுய மரியாதை

சுய சன்னதம்

சுய மைதுனம்

சுய சுன்னத்

சுய இரக்கம்

சுய மோகம்

சுய விளம்பரம்

சுய தம்பட்டம்

சுய மயக்கம்

சுய கலக்கம்

சுய இறக்கம்

சுய தெளிவு

சுயம்

சுயம்

சொய்யம்

(சுய சமர்ப்பணம் – ஆட்டோவில் சுயமாடிக் கொண்டிருந்த “ஒற்றைக் கை” நடராசனுக்கு)

19.08.11

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »
%d bloggers like this: