பல்லாண்டு

சின்னப் பல்

சிற்றரிசிப் பல்

 

சிணுங்கும் பல்

சிரிக்கும் பல்

 

சிங்கப் பல்

சிங்காரப் பல்

 

தங்கப் பல்

தனிப் பல்

 

கடைவாய்ப் பல்

கடும் பல்

 

குட்டிப் பல்

குறுகுறுக்கும் பல்

 

அக்காள் பல்

அழகுப் பல்

 

அப்பன் பல்

அதட்டும் பல்

 

அம்மா பல்

அன்புப் பல்

 

ஆயா பல்

ஆடும் பல்

 

தாத்தா பல்

தள்ளாடும் பல்

 

அத்தைப் பல்

சொத்தைப் பல்

 

மாமன் பல்

புலிப் பல்

 

மச்சான் பல்

நரிப் பல்

 

புலிப் பல்

புல் படாப் பல்

 

நரிப் பல்

புலப்படாப் பல்

 

நாய்ப் பல்

நயக்கும் பல்

 

பேய்ப் பல்

பெரும் பல்

 

உன் பல்

மயக்கும் பல்

 

என் பல்

மெல்லும் பல்

 

எனக்கும் பல்

உனக்கும் பல்

 

பல் பல்

பல்லாயிரம் பல்.

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மரணத்தின் வாசனை

மரணத்தின் வாசனை
என் வீடு முழுக்கப் பரவியிருக்கிறது
வரவிருக்கும் மரணத்தின் வாசனை
 
புற்றீசல் போலப் பரவும்
படரும் வாசனை
வீடு முழுக்கப் பரவியிருக்கிறது
 
வாசனை
கண் முன்னே
நிழலாடவும் செய்கிறது
 
தொய்ந்த உடலாக
தளர்ந்த நடையாக
அவிழ்ந்த ஆடையாக
 
மரணத்தின் வாசனை
என் காதருகே
மெலிதாக கிசுகிசுக்கவும் செய்கிறது
 
தணிந்த குரலாக
விசும்பலாக
மௌனமாக
 
செவி சாய்த்து
விழி கவிழ்த்து
நாவடக்கி
 
சுவாசித்து
காத்திருக்கிறேன்.
கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

எப்புறம்?

இந்தப்புறம் திரும்பியவனுக்கு

அந்தப்புரம் தெரிந்தது

அந்தப்புரம் தெரிந்தவனுக்கு

எந்தப்புறமும் தெரிந்ததில்லை

அந்தப்புறம் திரும்பியவனுக்கு

இந்தப்புறம் தெரிந்தது

இந்தப்புறம் தெரிந்தவனுக்கு

எந்தப்புறமும் தெரிந்தது

அப்புறமும் விரிந்தது.

04.08.18

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்…

இதனால் சகலமானவர்களுக்கும்

தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்…

மறைந்த

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்களின் நல்லாட்சி நடைபெற்றுவருகிறது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியின் பேரில்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

தூப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

பச்சிளம் சிறுமியின் வாயில் சுடப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

14 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

மூன்று நாட்கள் நரவேட்டை ஆடப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

இயல்புநிலை திரும்பியது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் நல் விருந்து உண்டனர்

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் உறங்கினர்.

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்கள் கழித்தனர்.

மறைந்த

மாண்புமிகு முதல் குற்றவாளியின் நல்லாசியுடன்

நல்லமைச்சர்களின் நல்லாட்சி

நலமே நடைபெற்றுவருகிறது.

 

நன்றி: நக்கீரன்

 

 

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

ராஜாவின் கோவணம்

விருதுக்கு ஓர் ஆள் வேண்டும்
என் கோவணம் சுமக்க
ஒரு தோள் வேண்டும்
அரைஞான் கயிறு
உன் கழுத்து ஆரம்
பாதரட்சைகள் உன் கிரீடம்
உமிழ் நீர் இளநீர்
சிந்தும் விந்து அமுதுனக்கு
தருகவா?

பருக வா
பெறுக வா
என் அற்பப் பதரே!

வந்தேன்
தந்தேன்
என் நாவை
சொட்டும் உன் அமிழ்து பருக
வழியும் உன் உமிழ் நீர் சுவைக்க
மலம் மிதித்த பாதரட்சைகள் சுமக்க
தேய்ந்த உன் அரைஞான்
என் கழுத்துரச
கோவண மணம் தோள் கமழ
தவித்துக்கிடந்தேன்
தா தா எனத் தவமிருந்தேன்.

தருகவே
பெறுகவே
கடைத்தேறுவேன் பதர் யானே!

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

ஆலெலூயா

அறிவுறுத்துபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

பொதுவாக பொதுவில் அறிவுறுத்துபவர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

பொதுவில் பொதுவாக அறிவுறுத்துபவர்கள்

ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

பொதுவாக பொதுவில் அறிவுறுத்துபவர்கள்

பெரிதினும் பெரிதானவர்கள்

அரிதினும் அரிதானவர்கள்

அரிதாரம் அற்றவர்கள்

அறம் அறிந்தவர்கள்

அறிவானவர்கள்

அற்பராகவும் ஆனவர்கள்.

 

ஆமென்!

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

விட்டை

கண்கள் கலந்து

கருவுருவதில்லை காதல்

கன்னத்து முத்தத்தில்

கழுத்து வருடலில்

உதட்டு உரசலில்

ஊற்றெடுப்பதில்லை காதல்.

 

அந்தராத்மாவில்

அந்தரத்தில்

பிறப்பதில்லை காதல்

அடியில்

மடியில்

கால் கவட்டுக்கிடையில்

ஊற்றெடுப்பதே காதல்.

 

கவட்டுக்கிடையில்

கள்ளம் நல்லம்

நல்ல வெல்லம் என்ன?

கழுதை விட்டை

கதிமோட்சம்.

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
%d bloggers like this: