நினைவுகளைச் சுமந்த மனமொன்று
நிறைவற்று அலைகிறது
காற்றிலே அலைந்த ஒற்றைச் சிறகு
அன்றிது
விருட்சம்
வேரிலே பாய்ந்த சுடுநீர்
கிளைகளில் இலைகளில்
பழுத்த கனிகளில்
மலராத மொட்டுகளில்
அடி முதல் நுனி வரை
உறைந்த பெரும் குருதியும்
அகாலக் கதறல்களும்
அழுகிய உடல்களும்
அணையாத் தனலுமாய்
காற்றில் கனவாய்
பெரும் நினைவாய்
அலைந்து சுழலும்
ஒரு மனம்
ஒராயிரம் நினைவுகள்
ஒரு பார்வை