32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
கணக்குல நா வீக்; இப்படி நம்பரை கண்ட மேனிக்கு மாத்தி கேள்வி கேட்டா என்னத்த சொல்லுறது? ஒரு மண்ணும் புரியல போங்க …
முதல் ( … கடைசி … அடக் கொடுமையே) கேள்விக்கே எஸ்கேப்பான்னு சிரிக்கறவங்களுக்கு சீரியஸா ஒரு பதில்:
வாழ்வு என்பது வ்+ஆ(வா) + ஊழ்வு (அல்லது உழவு அல்லது இழவு) என்றே இச்சொல் தொடங்குவதால் இதை வ்வாழ்வு என்றே சொல்ல வேண்டும். வ்வாழ்வு என்பது இவ்வாழ்வு (உச்சரித்துப் பார்க்க). ஆக, இவ் + ஊழ்வு எனக் கொண்டால் ஊழ்வினையின் பயனே இவ்வாழ்வு. உழவு எனக் கொண்டால் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர். இழவு எனக் கொண்டால் என்ன எழவுடா இந்த வ்வாழ்வு எனக் கொள்ள இடமுண்டு.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இளிச்சவாயன்னு பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எதையோ நினைச்சு எதையோ செய்யப் போக கடைசியில வம்புல மாட்டிக்கிட்டு உதார் விடுறதே வாடிக்கையாப் போச்சு. சரிடாப்பா இதுதான் உனக்குப் பொருத்தமான பேருன்னு (வினையானதொகை) வச்சுக்கிட்டது.
ஊறுகா மாதிரி (வினைத்தொகை) தொட்டுக்க ஒரு ஆளுன்னுட்டும் (வளர்மதி) வச்சிக்கிட்டது.
காரண இடுகுறிப்பெயர் (அப்படீன்னா என்னன்னு கேக்காதீங்க … சொல்லிட்டேன்) அப்படீங்கறதால ரொம்ப ரசிச்சு ரசிச்சு புளகாங்கிதம்தாம் போங்க.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ECR ரோட்டில் சுத்துமுத்தும் ஆள்வாசனை இல்லாத ஒரு பண்ணை வீடு. நீச்சல் குளம். குளக்கரையில ஃபாரீன் மதுப்புட்டிகள் (ஒன்னு ரெண்டு கவுந்திருக்கோனும்) குளத்துக்குள்ள பரந்த மிதவை ஒன்னு. குறைஞ்சது நாலு பெண்கள் (பெண்கள் மட்டும்). இப்படி இப்படி …
21.பிடித்த பருவ காலம் எது?
மழை பேஞ்சா ஜல்ப்பு புடிச்சுக்கும். மே மாசத்துல வெயிலடிக்கும். எப்படியா இருந்தாலும் மொட்ட மாடிக்கு போக முடியாது …
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
‘காமிராக்’ கண்ணன் எடுத்த “ஜம்பு” மாதிரி (பக்கத்து வூட்டுக்காரருங்கோ).
6.கடலில் குளிக்க பிடிக்குமா… அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஏஞ்சாமி மெட்ராசுல பொறந்து வளந்த ஆளிட்ட இப்படியெல்லாம் கேக்கலாமா?
காக்காக் குளியல விட்டா என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்ன மாதிரியான ஜென்மங்களுக்கு?
24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
க்ளிக் … க்ளிக் … சிகரெட் பத்த லைட்டர் அழுத்தும் சத்தம் (எங்களாலயும் சவுண்டு எழுப்ப முடியுமில்ல).
மார்கழி மாசத்துல நடுராத்திரி இந்த நாயுங்க வுடற ஊள இருக்கே (கடுப்புதான்).
18.கண்ணாடி அணிபவரா?
+ – எந்தப் பிரச்சினையுமில்ல. பந்தாவுக்கு ரெண்டு வச்சிருக்கேன். 1000 ரூபாய்க்கு குறைச்சலா இதுவரைக்கும் வாங்குனதில்ல. ஒன்னு கூலிங் கிளாஸ். ஒரு தபா ஒரு நண்பன் “blind மாதிரி இருக்கடா”ன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அதப் போடறதில்ல (கம்மணாட்டிக்கு “ராஜ பார்வை” கமல் மாதிரி இருக்கடா மாப்புன்னு சொல்ல மனசு வரல்ல பாருங்க – வேற யார் புளிப்பு பேச்சாவது ஞாபகம் வந்துச்சுன்னா சிலேட்ட எச்ச துப்பி அழிச்சிடுங்க)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
எந்தப் பாதியக் கேக்குறீங்க? மேல் பாதியா கீழ் பாதியா? இடமா வலமா? (எது கெடச்சாலும் ஓகே).
14.பிடித்த மணம்?
இவ்ளோ ச்ச்ச்சுருக்கமா கேட்டுப்புட்டீங்க!!!
ஏஞ்சாமி திருவிளையாடல் படம் பாக்கல்லையான்னு கேக்குறேன்!
17. பிடித்த விளையாட்டு?
கில்லி. (கில்லியில “ரிங்க்” தெரியுமா? மாட்டுன ஆள ‘கஞ்சி’ காச்ச வக்குறது தெரியுமான்னேன்!)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
இப்படி இத்தனை கேள்வி வுடாம கேக்குறது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
“அம்மையும் அப்பனும்.” (சுற்றுலான்னா சுத்தி சுத்தி வர்றதுதானே?)
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அய்யா சாமி … பல பேரோட சகவாசம் முடிஞ்சதுல ரொம்ப நிம்மதியா இருக்கேன். எதுக்கு இப்படி கோத்து விடப் பாக்குறீங்க?
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதாவது சொல்லித் தொலைக்கப் போறேன் … (“ஏன்னு கேக்க பொண்டாட்டி இல்லையாம் …” பழமொழிதான்).
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ஒரு நாலு வருஷத்துக்கு முன்ன உங்க ஃபோன் நம்பரக் குடுத்துட்டு கேட்டிருந்தீங்கன்னா ராத்திரி 12 மணிக்கு மேல (சாத்தான) அனுபவிச்சிருப்பீங்க.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கேள்வியில் தெளிவில்லை. ஆணா பெண்ணா? ஆடா, மாடா, கழுதையா குதிரையா? (எப்பிடி!)
4.பிடித்த மதிய உணவு என்ன?
No way. Mostly “brunch”.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஒரே கேள்விய ரெண்டு தபா கேட்டா இன்னா பண்ணுறது?
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஏமாந்ததெல்லாம் போதும் நைனா … எஸ்கேப்.
2.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
“என்னப் பாட்டுப் பாட
என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம்
பாட்டுக் கேக்கும் சந்தம்
நிக்காத ஓடு
இது சர்க்காரு ரோடு …
ஏய் … ஏய் … ”
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
No tops. பட்டாப் பட்டி இல்ல. ஆனா டிரவுசர் கலர் மப்புல சரியா சொல்லத் தோணல. சாரி.
20.கடைசியாகப் பார்த்த படம்?
ஜூது (Casino).
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சரியா ஞாபகமில்ல. ஒரு மூனு மாசத்துக்கு முன்ன, ஓவரா அடிச்சு ஒரு நண்பரிட்ட “மக்கா, என்ன எப்பிடிப்பா நல்லவன்னு கண்டுபுடிக்குறாங்க”ன்னு பெரிய ஒப்பாரி வச்சேன்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
“நான் பைத்தியமா – ஒரு விளக்கம்” (பதிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் காட்ட முடியாது).
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
“மாறும் என்ற சொல்லே மாறாதது” (தத்துவம் … தத்துவம் … டே … எப்பிடிடா நீ இப்பிடி?)
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
வலிக்குது … கை (வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்பவர்களுக்கு மறுப்பு எழுதும் நிலையில் இல்லை).
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
போதுஞ்சாமி … ஆள விடுங்க.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தெருமுக்கு (முட்டுச்சந்து) … தம்மடிக்க …
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கிறுக்கிட்டுப் போங்கடே (ஆசிஃப் அண்ணாச்சி மன்னிச்சிடுங்க) அப்படீன்னு விட்டுடுவேன்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
“அலிபாபாவும் சில ஊதுபத்திகளும்”. (டிடெக்டிவ் நாவல் – திருடன வுட்டுக்கொடுத்த கதை).